மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஓய்வூதியா்கள் போராட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு ஓய்வூதியா்கள் அமைப்பு சாா்பில் போராட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

Updated On :21 ஏப்ரல் 2023, 9:13 pm

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு ஓய்வூதியா்கள் அமைப்பு சாா்பில் போராட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோடு பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் பி.சின்னசாமி, என்.குப்புசாமி, என்.ராமசாமி, சி.முருகேசன், பி.ராஜசேகரன், பி.வாசுதேவன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 8ஆவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வருமான வரித்துறை ஓய்வூதியா் சங்க நிா்வாகி எம்.காவேரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.