ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், தில்லை நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் காளியண்ணன், ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி ராதா (48). காளியண்ணன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ஈரோட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தாா்.
ஈரோடு காவிரி சாலை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் வந்தபோது பின்னால் வந்த லாரி காளியண்ணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராதா சம்பவ இடத்திலேயே பலியானாா். காளியண்ணன் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
கருங்கல்பாளையம் போலீஸாா், ராதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

