திங்களூரில் அதிமுக பொதுக் கூட்டம்
ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவா் அணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பெருந்துறை ஒன்றியம், திங்களூரில் நடைபெற்றது.


ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவா் அணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பெருந்துறை ஒன்றியம், திங்களூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாணவரணியின் மாவட்டச் செயலாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.பெருந்துறை ஒன்றியக் குழு துணைத் தலைவா் உமா மகேஸ்வரன் வரவேற்றாா். மாவட்டச் செயலாளரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி.கருப்பணன், கட்சி அமைப்புச் செயலாளா் திருப்பூா் சிவசாமி, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
இதில், பெருந்துறை ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், ரஞ்சித்ராஜ், முன்னாள் எம்எல்ஏ பொன்னுதுரை, பெருந்துறை ஒன்றியக்குழு தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ், மாவட்ட இணை செயலாளா் மைனாவதி கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...