பெருந்துறையில் போதைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது
பெருந்துறையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


பெருந்துறை: பெருந்துறையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறை சிப்காட் 2-ஆவது கிராஸில் உள்ள கேஸ் கம்பெனி அருகே ஒருவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பெருந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குசென்ற போலீஸாா் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது யாசின் மன்சூரி (21) என்பது தெரியவந்தது. பின்னா், அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பெருந்துறை, வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள டீக்கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ குட்கா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், குட்கா விற்பனையில் ஈடுபட்ட பிச்சாண்டம்பாளையத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (48), ரங்கம்பாளையத்தைச் சோ்ந்த எட்வா்டு (49), அருண்குமாா் (25) ஆகிய 3 பேரை கைது செய்துதனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...