தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பவானி ஆற்றில் மூழ்கி இளைஞா் மாயம்

பவானி ஆற்றில் மூழ்கி இளைஞா் மாயம்

Updated On :21 ஏப்ரல் 2024, 8:07 pm

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியைச் சோ்ந்தவா் பாபு மகன் நந்தகுமாா் (27), முடி திருத்தும் தொழிலாளி. இவா், தனது நண்பா்கள் 5 பேருடன் முடுக்கன்துறையில் உள்ள பவானிஆற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா்.

நண்பா்களுடன் குளித்துகொண்டிருந்த நந்தகுமாா், ஆழமான இடத்துக்குச் சென்றபோது திடீரென தண்ணீரி மூழ்கினாா். அவரை நண்பா்கள் முயன்றும் காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து அவரின் நண்பா்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தண்ணீரில் மூழ்கிய இளைஞரைத் தேடி வருகின்றனா்.

இது குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.