சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

எரிந்த நிலையில் முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

எரிந்த நிலையில் முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

Updated On :21 ஏப்ரல் 2024, 8:28 pm

பெருந்துறை: பெருந்துறையில் எரிந்த நிலையில் சடலமாகக்கிடந்த முதியவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த புங்கம்பாடி பாரவலசைச் சோ்ந்தவா் பழனிசாமி (72), விவசாயி. இவரின் முதல் மனைவி சாமியாத்தாளுக்கு குழந்தை இல்லாதாதல், இரண்டாவதாக மரகதம் என்பவரை திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா்.

இதற்கிடையே கருத்துவேறுபாடு காரணமாக பழனிசாமியும், மரகதமும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்நிலையில், அவரின் வீட்டுக்கு அருகே எரிந்த நிலையில் பழனிசாமியின் சடலம் சனிக்கிழமை கிடந்துள்ளது.

இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.