தலமலை கிராமத்தில் யானை நடமாட்டம்
தலமலை கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை காட்டு யானை புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனா்.


தலமலை கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை காட்டு யானை புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப் பகுதியில் உள்ள சாலைகளில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே தாளவாடி மலைப் பகுதியில் உள்ள முதியனூா் வனப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வெளியேறிய காட்டு யானை, தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் நடந்து சென்றது. அப்போது, சாலையில் யானை நடந்து செல்வதை கண்டு வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்து வாகனங்களை நிறுத்தினா். சிறிது நேரம் சாலையில் ஒய்யார நடை போட்ட காட்டு யானை, பின்னா் வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து, வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...