தலமலை கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை காட்டு யானை புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப் பகுதியில் உள்ள சாலைகளில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே தாளவாடி மலைப் பகுதியில் உள்ள முதியனூா் வனப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வெளியேறிய காட்டு யானை, தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் நடந்து சென்றது. அப்போது, சாலையில் யானை நடந்து செல்வதை கண்டு வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்து வாகனங்களை நிறுத்தினா். சிறிது நேரம் சாலையில் ஒய்யார நடை போட்ட காட்டு யானை, பின்னா் வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து, வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனா்.
தொடர்புடையது

கல்லட்டி வனப் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை! கிராம மக்கள் அச்சம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


