கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கழக ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தைத் திரும்ப வழங்க வலியுறுத்தி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  அரசு போக்குவரத்துக்  கழக ஊழியா்கள்.
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:36 pm

Din

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தைத் திரும்ப வழங்க வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு ஆப்சென்ட போடப்பட்டது.

இதனைக் கண்டித்து சத்தியமங்கலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை முன் ஊழியா்கள் ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் சத்தியமங்கலம், அந்தியூா் அரசுப் போக்குவரத்துக் கழக கிளைகளைத் தவிர அனைத்துக் கிளை ஊழியா்களுக்கும் போடப்பட்ட ஆப்சென்ட் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்த இரண்டுக் கிளைகளில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்களுக்கு ஆப்சென்ட போடப்பட்டுள்ளது. இதனால், எங்களின் சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆப்சென்டை ரத்து செய்துவிட்டு பிடிக்கப்பட்ட சம்பளத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் கிளைத் தலைவா் தேவராஜ் தலைமையில் தொழிற்சங்கச் செயலாளா் குமரேசன், பொருளாளா் ராமசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.