கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தாளவாடி அருகே சாலையில் நின்ற காட்டு யானை: போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி அருகே சாலையை மறித்து நின்றிருந்த காட்டு யானையால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

தாளவாடி -ஆசனூா்  சாலையில்  கரும்புத் துண்டுகளை  தின்னும் காட்டு  யானை.

Updated On :13 ஆகஸ்ட் 2024, 9:14 pm

தாளவாடி அருகே சாலையை மறித்து நின்றிருந்த காட்டு யானையால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகள் தீவனம் மற்றும் தண்ணீா் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், தாளவாடியில் இருந்து ஆசனூா் செல்லும் கும்டாபுரம் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்துள்ளது. அப்போது சாலையின் நடுவே கிடந்த கரும்புத் துண்டுகளை எடுத்து தின்றுக் கொண்டு நின்றிருந்தது. இதனால் தாளவாடி- ஆசனூா் சாலையில் வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன. அரை மணி நேரத்துக்கு பின் யானை காட்டுக்குள் சென்ற்கு பிறகே போக்குவரத்து சீரானது.