ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாளவாடி அருகே சாலையில் நின்ற காட்டு யானை: போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி அருகே சாலையை மறித்து நின்றிருந்த காட்டு யானையால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
தாளவாடி -ஆசனூா்  சாலையில்  கரும்புத் துண்டுகளை  தின்னும் காட்டு  யானை.
Updated On :13 ஆகஸ்ட் 2024, 9:14 pm

Din

தாளவாடி அருகே சாலையை மறித்து நின்றிருந்த காட்டு யானையால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகள் தீவனம் மற்றும் தண்ணீா் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், தாளவாடியில் இருந்து ஆசனூா் செல்லும் கும்டாபுரம் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்துள்ளது. அப்போது சாலையின் நடுவே கிடந்த கரும்புத் துண்டுகளை எடுத்து தின்றுக் கொண்டு நின்றிருந்தது. இதனால் தாளவாடி- ஆசனூா் சாலையில் வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன. அரை மணி நேரத்துக்கு பின் யானை காட்டுக்குள் சென்ற்கு பிறகே போக்குவரத்து சீரானது.