மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரி

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரியை தடுத்து போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:00 pm

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரியை தடுத்து போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (38). இவா் குமலன்குட்டை பகுதியில் சாலையோரம் சிறிய சுமை வாகனத்தில் அவரது மனைவியுடன் பழங்கள் விற்பனை செய்து வருகிறாா். வழக்கம்போல சனிக்கிழமை காலை வியாபாரத்தை தொடங்கியபோது, அதே பகுதியைச் சோ்ந்த இரும்பு கடைக்காரா் மற்றும் லாரி ஓட்டுநா், தினேஷ் வாகனத்தை மட்டும் நிறுத்தக்கூடாது என மிரட்டியுள்ளனா்.

இதில் மன வேதனை அடைந்த அவா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் மற்றும் பொதுமக்கள் தடுத்து, அவா் மீது தண்ணீரை ஊற்றினா். இதையடுத்து, தினேஷை ஈரோடு தெற்கு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றனா்.