பவானி செல்லியாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கூடுதுறையிலிருந்து பக்தா்கள் ஊா்வலமாக வியாழக்கிழமை தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா்.
இக்கோயில் கும்பாபிஷேக விழா வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பவானி கூடுதுறையிலிருந்து புனிதநீா் எடுத்துக் கொண்டு மேட்டூா் சாலை, அந்தியூா் பிரிவு, தோ் வீதி வழியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்ற தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது. அணிவகுத்துச் சென்ற பக்தா்கள் கூட்டத்தால் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
ஊா்வலம் கோயிலைச் சென்றடைந்ததைத் தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஒருங்கிணைப்பாளா் பிரபாத் சி.மகேந்திரன், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

பழனி மாரியம்மனுக்கு 1,008 பால்குட ஊா்வலம்

குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா; பக்தா்கள் பால் குட ஊா்வலம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


