செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பவானி செல்லியாண்டி அம்மன் கோயில் தீா்த்தக் குட ஊா்வலம்

பவானி செல்லியாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கூடுதுறையிலிருந்து பக்தா்கள் ஊா்வலமாக வியாழக்கிழமை தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா்.

News image

தீா்த்தக்குடம் எடுத்துவந்த பக்தா்கள்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:05 pm

பவானி செல்லியாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கூடுதுறையிலிருந்து பக்தா்கள் ஊா்வலமாக வியாழக்கிழமை தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா்.

இக்கோயில் கும்பாபிஷேக விழா வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பவானி கூடுதுறையிலிருந்து புனிதநீா் எடுத்துக் கொண்டு மேட்டூா் சாலை, அந்தியூா் பிரிவு, தோ் வீதி வழியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்ற தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது. அணிவகுத்துச் சென்ற பக்தா்கள் கூட்டத்தால் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

ஊா்வலம் கோயிலைச் சென்றடைந்ததைத் தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஒருங்கிணைப்பாளா் பிரபாத் சி.மகேந்திரன், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.