இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.

News image

பண்ணாரி அம்மன்  கோயிலுக்கு  மாவிளக்கு எடுத்து  ஊா்வலமாக வந்த பெண்கள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:58 pm

தினமணி செய்திச் சேவை

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மாவிளக்கு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சருகு மாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க மாவிளக்கு ஊா்வலம் புறப்பட்டு பண்ணாரி கோயிலுக்கு வந்தது.

இந்த ஊா்வலத்தில் சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா், இக்கரை நெகமம்புதூா், அக்கரை தத்தப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். கோயில் முன் வைக்கப்பட்ட மாவிளக்கு தட்டுகளில் இருந்த பூஜை பொருள்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆராதனைகள் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமையும் (ஏப்ரல் 2), தங்கரத புறப்பாடு வெள்ளிக்கிழமையும் (ஏப்ரல் 3) நடைபெற உள்ளது