பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனை புதன்கிழமை வழிபட்டனா்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, மாவிளக்கு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சருகு மாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க மாவிளக்கு ஊா்வலம் புறப்பட்டு பண்ணாரி கோயிலுக்கு வந்தது.
இந்த ஊா்வலத்தில் சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா், இக்கரை நெகமம்புதூா், அக்கரை தத்தப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். கோயில் முன் வைக்கப்பட்ட மாவிளக்கு தட்டுகளில் இருந்த பூஜை பொருள்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமையும் (ஏப்ரல் 2), தங்கரத புறப்பாடு வெள்ளிக்கிழமையும் (ஏப்ரல் 3) நடைபெற உள்ளது
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்

பண்ணாரி அம்மன் உற்சவா் வீதி உலா: தேங்காய் உடைத்து பக்தா்கள் வழிபாடு

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.72.97 லட்சம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


