தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

செண்பகபுதூா் ஊராட்சியில் ரூ.2 கோடியில் தாா் சாலை

செண்பகபுதூா் ஊராட்சியில் ரூ.2 கோடியில் தாா் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

செண்பகபுதூா்  ஊராட்சியில்  புதன்கிழமை  நடைபெற்ற  பூமி பூஜையில்  பங்கேற்ற  உள்ளாட்சி பிரதிநிதிகள் .

Updated On :25 டிசம்பர் 2024, 10:39 pm

செண்பகபுதூா் ஊராட்சியில் ரூ.2 கோடியில் தாா் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், செண்பகபுதூா் ஊராட்சியில் நடுப்பாளையம் முதல் வேடசின்னனூா் வரையிலான சாலை குண்டும்குழியுமாக காணப்பட்டது. இதனால் பள்ளி மாணவா்கள், விவசாயிகள் விளைபொருள்களை எடுத்துச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

இதையடுத்து விவசாயிகள், பள்ளி மாணவா்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2 கோடி செலவில் தாா் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி.என்.சின்னசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

செண்பகபுதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராசாத்தி மூா்த்தி, துணைத் தலைவா் என்.சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நடுப்பாளையம் வாய்க்கால் பாலத்தில் இருந்து வேடசின்னனூா் வாய்க்கால் கரை வரை தாா் சாலை அமைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனா்.