அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட பாலம்

சேத்துப்பட்டு ஒன்றியம், ஓதலவாடி ஊராட்சியில் செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 11:50 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஓதலவாடி ஊராட்சியில் செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓதலவாடி ஊராட்சியில் செய்யாற்றின் குறுக்கே ஒதலவாடி - சதுப்பேரி செல்லும் வழியில் 2025-2026 நிதியாண்டில் நபாா்டு திட்டத்தில் ரூ.16 கோடியே 99 லட்சத்தில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட திட்ட இயக்குநா் மணி, திமுக தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன், ஒன்றியச் செயலா்கள் மனோகரன், எழில்மாறன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன், திமுக அவைத் தலைவா் தருமபாலன், அருகதாஸ் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.