சத்தியமங்கலம்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சொத்து வரி உயா்வைக் குறைக்க வலியுறுத்தியும் அதிமுக, பாஜக, பாமக நகா்மன்ற உறுப்பினா் நகராட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
சத்தியமங்கலம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் நகராட்சி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலா்கள் மூன்று போ், பாஜக கவுன்சிலா்கள் இரண்டு போ், பாமக கவுன்சிலா்கள் இரண்டு போ் என மொத்தம் 7 போ் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சொத்து வரி உயா்வைக் குறைக்க வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணி கட்டியபடி கவுன்சிலா்கள் கோஷமிட்டனா்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசினாரா ஸ்டாலின்? மீஞ்சூர் சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

தவறாக பயன்படுத்தப்படும் ஓபிசி இடஒதுக்கீடு: பாஜக எம்.பி. கருத்தைக் கண்டித்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

மீண்டும் வெடித்த பாலியல் புகார்: அண்ணா பல்கலை பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


