/

சிப்காட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து பாஜக விழிப்புணா்வு பிரசாரம்

படம் உள்ளது... சிப்காட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து பாஜக விழிப்புணா்வு பிரசாரம்

News image

விழிப்புணா்வு பிரசாரத்தில் கலந்துகொண்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:29 am IST

பெருந்துறை சிப்காட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் நிலம், நீா், காற்று ஆகியவை மாசடைந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இந்நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் பெருந்துறை சிப்காட் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையம் பகுதியில் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது இதில் பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் சரவணன் தலைமையில் பெருந்துறை நகரத் தலைவா் பூா்ணசந்திரன், மாவட்டத் தலைவா் வேதானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.