நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது: கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ.

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று பவானி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் கூறினாா்.

News image

கே.சி.கருப்பணன் (அதிமுக)

Updated On :22 நிமிடங்கள் முன்பு

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று பவானி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் கூறினாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றிக்கு உழைத்த அதிமுக நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா, வெற்றி விழா பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பெருந்துறை வடக்கு ஒன்றியச் செயலாளா் ரஞ்சித்ராஜ் தலைமை வகித்தாா். ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி. கருப்பணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், பல்வேறு சோதனைகளைக் கடந்து வெற்றிகரமாக திகழ்ந்து வரும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. கட்சிக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் சிலரை மக்கள் பாா்த்துக் கொண்டுதான் உள்ளனா். கட்சியை விட்டு யாா் வெளியேறினாலும் மக்கள் நம்முடன்தான் இருக்கிறாா்கள். அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றதையடுத்து பெருந்துறை தொகுதி அதிமுகவின் எஃக்கு கோட்டை என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி. பொன்னுதுரை, ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியன், பூபாலகிருஷ்ணன், பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் சாந்திஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.