தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடு

சாத்தூரில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடு பிரசாரம் மேற்கொண்டது குறித்து...

News image

நயினார் நாகேந்திரனுடன் சந்திரபாபு நாயுடு - யூடியூப்

Updated On :21 ஏப்ரல் 2026, 11:30 am

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (ஏப். 21) தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

''தமிழ்நாட்டில் மாற்றம் தொடங்கிவிட்டது. இனி யாராலும் அதனை தடுத்து நிறுத்த முடியாது. மொழி மீது அதிகம் பற்று கொண்டவர்கள் தமிழக மக்கள். அதேபோன்று பாஜக மீதும் தமிழக மக்களின் பற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்திற்கு அருகில் சித்தூர், திருப்பதி உள்ளது. அங்கு தமிழர்கள் அதிகம் உள்ளனர். அவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்.

தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியிலும், உள்கட்டமைப்பு வளர்ச்சியிலும் ஹைதராபாத் முன்னிலையில் உள்ளது. சென்னை அதுபோன்று மாற வேண்டும். வளர்ச்சியை வேகப்படுத்துவதில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்படி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இதனை மாநில அரசு செய்யவில்லை.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு அதிகம் வாய்ப்பளிப்பதை உறுதி செய்யும் வகையில், மகளிர் ஒடஒதுக்கீட்டிற்காக மசோதா கொண்டுவந்தது பாஜக அரசு. அதனை தமிழ்நாடி அரசு தோல்வி அடையச் செய்துள்ளது.

ஏனெனில், பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதை காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் விருப்பம் இல்லை.

கடந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததை உணர்ந்தீர்களா? இனி மாற்றம் நடக்கும். மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. திராவிட மாடல் போதும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி வேண்டும்'' என சந்திரபாபு நாயுடு பேசினார்.

Summary

Chandrababu Naidu campaigning in support of Nainar Nagendran in Sattur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.