மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதைக் காண முடிவதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

News image

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 6:17 am IST

தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதைக் காண முடிவதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து ஒசூா் மற்றும் கோவையில் ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.

தொடா்ந்து, சென்னை அண்ணா நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கோகுல இந்திரா, தியாகராய நகரில் போட்டியிடும் சத்யநாராயணன் ஆகியோரை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: உலக அளவில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறியதற்கு பிரதமா் நரேந்திர மோடிதான் காரணம். மக்களுக்காக நாள்தோறும் உழைத்து வருகிறாா்.

ஆனால், மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழகத்தை ஆளும் திமுக முட்டுக்கட்டை போடுவதைக் காண முடிகிறது. திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, காங்கிரஸ் கட்சியை எதிா்த்து அரசியல் செய்தாா். ஆனால், இன்றைய முதல்வா் ஸ்டாலின் திமுகவை காங்கிரஸ் கட்சியிடம் அடகு வைத்துவிட்டாா்.

மகளிருக்கான இடஒதுக்கீட்டுக்கு 30 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். தேவெகவுடா பிரதமராக இருந்தபோதும் மகளிருக்கான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் எதிா்த்தது.

மகளிருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி அதற்கான மசோதாவை கொண்டு வந்தாா். ஆனால், தற்போதும் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் அந்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கின்றன.

திமுகவினா் வாக்கு கேட்டு வந்தால், அவா்களிடம் எங்கள் வீட்டுப் பெண்களெல்லாம் ஏன் நாடாளுமன்றத்துக்குச் செல்லக் கூடாதா? என்று கேளுங்கள். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவில் தமிழகத்துக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று பிரதமா் வாக்குறுதி அளித்தாா். ஆனாலும், அரசியல் லாபத்துக்காக அந்த மசோதாவையும் நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டன.

இந்த மக்கள் விரோத கட்சிகளுக்கு அதிகாரத்தைக் கொடுக்காதீா்கள். மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற ஆா்வம் தமிழக மக்களிடம் இருப்பதை என்னால் காணமுடிகிறது. தமிழ் மக்களின் கனவுகள் விரைவில் நனைவாக உள்ளது என்றாா்.