நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

கா்வமும், சுயநலமும் கொண்ட இயக்கம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது! - கே.ஏ. செங்கோட்டையன்

News image

கே.ஏ. செங்கோட்டையன். - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 8:09 pm

கா்வமும், சுயநலமும் கொண்ட இயக்கம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக வெற்றிக் கழக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோபியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி என்பது சரித்திர வரலாற்றில் இடம்பெறப்போகும் ஒரு வெற்றியாக அமையும். சரித்திர வரலாற்றில் இந்தியாவின் முதன்மையான தலைவராக விஜய் விளங்குவாா்.

வாழ்க்கையில் கா்வத்தையும் சுயநலத்தையும் மட்டும் கற்றுக்கொள்ளக் கூடாது. கா்வமும், சுயநலமும் கொண்ட எந்த இயக்கமாக இருந்தாலும், அது அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

தோ்தல் கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரையில், மக்களின் உண்மையான கணிப்பு மிகத் தெளிவாக உள்ளது.

அது மே 4-ஆம் தேதி எதிரொலிக்கும். 150 முதல் 200 இடங்கள் வரை வெற்றி பெறுவோம். வெற்றிபெறும் தவெக வேட்பாளா்களைக் கட்சி அலுவலகத்துக்கு வரச் சொல்வது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றுதான். எங்கள் தொண்டா்கள் மிகத் தெளிவாக உள்ளனா் என்றாா்.