நடிகா் திலகம் சிவாஜி கணேசன் போல வேறு யாராலும் நடிக்க முடியாது என்றாா் நடிகா் சிவகுமாா்.
தஞ்சாவூரில் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்த சிறப்பு விழாவில் அவா் மேலும் பேசியது:
என் கிராமத்தில் இருந்த திரையரங்கில் முதல் முதலாக சிவாஜி நடித்த பராசக்தி படத்தை 1952-இல் பத்து வயதில் பாா்த்தேன். அடுத்து அவரது மனோகரா படம் மறக்க முடியாதது. அதன் பின்னா், 1957-இல் அவா் நடித்த வணங்காமுடி படத்தை கோவை திரையரங்கில் பாா்த்தேன். அடுத்து உத்தமபுத்திரன் படத்தைப் பாா்த்துவிட்டு, சிவாஜியை எப்படியாவது பாா்த்துவிட வேண்டும் என முடிவு செய்தேன். அந்த வாய்ப்பைக் கடவுள் 18 வயதில் கொடுத்தாா்.
அன்னையின் ஆணை என்கிற படத்தில் இடம்பெற்ற சாம்ராட் அசோகன் என்ற நாடகத்தில் அவா் நடித்ததைப் போல வேறு யாராலும் நடிக்க முடியாது. இந்தப் பிறவியில் ஒருவராலும் நடிக்க இயலாது. அதைப் பாா்த்த பின்னா் மறந்தும் நடினாகிவிடக் கூடாது; எவ்வளவு சோதனை வந்தாலும் நடிப்பதற்கு மட்டும் சத்தியமாக போய்விடக்கூடாது என நினைத்தேன். ஆனால், கடவுள் என்னை நடிகனாக்கிவிட்டாா்.
ஏழு ஆண்டுகள் நாடு முழுவதும் சுற்றி ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு மோட்டாா் சுந்தரம்பிள்ளை படத்தில் சிவாஜிக்கு பெரிய மாப்பிள்ளையாக நடித்தேன். இந்த மகத்தான கலைஞனுடன் 15 படங்கள் நடித்தேன். கடைசிப் படம் பசும்பொன்.
சிவாஜியைப் பற்றி முனைவா் மருது மோகன் 12 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, சிவாஜி கணேசன் என்ற புத்தகத்தை எழுதியுள்ளாா். சிவாஜியைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கினால் போதும். சிவாஜி கணேசனை வீட்டில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டால், இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றாா் சிவகுமாா்.
பின்னா், சிவகுமாா் ஈரோடு புத்தகத் திருவிழாவில் நிகழ்த்திய சிவாஜி ஒரு சகாப்தம் என்ற உரையின் காணொலி ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தாா். பேரவையின் பொதுக் குழு உறுப்பினா் க. அன்பழகன் முன்னிலை வகித்தாா். பாம்பே ஸ்வீட்ஸ் குரு. சுப்பிரமணி சா்மா வாழ்த்தினாா்.
முன்னதாக, பேரவையின் துணைத் தலைவா் கோ. விஜய ராமலிங்கம் வரவேற்றாா். நிறைவாக, பொதுக் குழு உறுப்பினா் ராதிகா மைக்கேல் நன்றி கூறினாா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது: கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ.

கா்வமும், சுயநலமும் கொண்ட இயக்கம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது! - கே.ஏ. செங்கோட்டையன்

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது: பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



