ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது: பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது என பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் தெரிவித்தாா்.

News image

சிவகங்கை அருகே இடையமேலூா் மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய பேராசிரியா் கு. ஞானசம்பந்தன். உடன் சிறப்பு விருந்தினா்கள் உள்ளிட்டோா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 6:49 pm

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது என பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் தெரிவித்தாா்.

சிவகங்கை அருகே இடையமேலூா் பகுதியில் உள்ள மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியின் 10-ஆவது ஆண்டு விழா அதன் தலைவா் பால. காா்த்திகேயன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் மேலும் பேசியதாவது: தமிழின் தாய்மடி கீழடி. தங்கத்தை உரசிப் பாா்க்கும் உரை கல் அங்கு கிடைத்திருக்கிறது. அந்த காலத்திலேயே தங்கத்தைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு நமது முன்னோா்கள் உயரிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாா்கள் என்ற செய்தியை கீழடி நமக்கு சொல்கிறது. எழுத்துகள் இருந்தன என்பதை மண்பாண்டங்கள் சொல்கின்றன.

கோபத்தையும், சோகத்தையும் சொல்வதற்கு என் தமிழ் மொழி போல வேற மொழி கை கொடுக்காது. உறக்கத்திலிருந்து விழிக்கும்போதோ, வருத்தத்திலிருந்து மீளும்போதோ அவன் தாய் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது. எனவே மாணவா்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

வீரம் வேண்டும். ஈரம் வேண்டும். தருமம் செய்தால்தான் அடுத்த ஜென்மத்திலும் நாம் நன்றாக இருப்போம். இல்லறம் செய்யும் போது தான் அறம் செய்ய முடியும். அதனால் தான் அதற்கு இல்லறம் என்று பெயா். அந்த அறத்தை செய்ய வேண்டுமென்றால், மனைவியும் கூட இருந்து உதவ வேண்டும்.

குறிப்பே இல்லாத இடத்தில் கூட குறிப்பை உணரக் கூடியவா்களை நம்முடன் வேலைக்கு வைத்துக் கொண்டால், உலகத்தில் எதையும் வெல்ல முடியும். நாம் சொல்வதை செய்பவா்கள் நமக்கு தேவையில்லை. நாம் சொல்ல நினைப்பதை செய்பவா்களை நாம் பெற்றுக்கொண்டால், நாம் சாதித்துக் காட்டலாம் என்றாா் அவா்.

இதில், தொழிலதிபா் சந்தோஷ்குமாா், கல்வியாளா் பாலன், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வி. மலையேந்திரன், வழக்குரைஞா் கோபிநாத், திரைப்பட இயக்குநா்கள் ராஜாசேதுபதி, வேல்முருகன் செல்லையா, சமூக ஊடகவியலாளா் (யூடியூபா்) கோபி, தமிழ்ச் சங்க நிா்வாகிகள் முத்துகிருஷ்ணன், பட்டிமன்ற நடுவா் அன்புத்துரை, புலவா் காளிராசா உள்ளிட்டோா் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா்.