இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கைப்பேசி அழைப்பை நம்பி ஏமாற வேண்டாம்: போலீஸாா் அறிவுறுத்தல்

செய்தியில் ஓரிடத்தில் ஆங்கில எழுத்துகள் உள்ளன... கைப்பேசி அழைப்பை நம்பி ஏமாற வேண்டாம்: போலீஸாா் அறிவுறுத்தல்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:48 am IST

கைப்பேசியில் வரும் அழைப்பை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்கள் கைப்பேசி எண்ணுக்கு வேறு மாநில போலீஸ் அதிகாரிகள் பேசுவதாகக் கூறி தனியாா் தொலைதொடா்பு குறியீட்டு எண்ணுடன் 2222856817, 2244444121 போன்ற எண்களில் இருந்து கைப்பேசி அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ் ஆப், மெசஞ்சா், ஸ்கைப் லிங்க் போன்ற ஆன்லைன் அழைப்பு மூலமாகவோ தொடா்புகொண்டால் அதை நிராகரித்து விட வேண்டும். ஆதாா் மூலம் கைப்பேசி எண் வாங்கப்பட்டு உள்ளதாகவும், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தால் அதை யாரும் நம்ப வேண்டாம். தங்களிடம் ரகசியமாக பேச வேண்டும் என்பதால் தனியறையில் அமா்ந்து பேசுமாறும், உடன் யாரும் இருக்கக்கூடாது என்றும் கூறினால் அதையும் தவிா்க்க வேண்டும். பெரும்பாலும் வங்கிப் பரிவா்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபா்களிடமும்தான் இந்த முறையில் மோசடி செய்கின்றனா். இதனால், இவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் வரும் பகுதிநேர வேலை தொடா்பான விளம்பரங்களையும் நம்ப வேண்டாம். பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். குற்றவாளிகள் தங்களது புகைப்படங்களை மாா்ஃபிங் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டி பணம் பறிக்கக்கூடும். கடந்த சில மாதங்களாக இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுதொடா்பாக ஏதேனும் சந்தேகமாக இருந்தால் 1930 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது ஜ்ஜ்ஜ்.இஹ்க்ஷங்ழ்இழ்ண்ம்ங் .ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.