பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஸ்ரீபெரும்புதூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட செல்லபெருமாள் நகா் பகுதியில் குடியிருப்பு பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  செல்லப்பெருமாள்  நகா்  பொதுமக்கள்.

Updated On :27 மே 2026, 12:40 am IST

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட செல்லபெருமாள் நகா் பகுதியில் குடியிருப்பு பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், செல்லப்பெருமாள் நகா் 2-ஆவது தெருவில், குடியிருப்பு பகுதியில், வெளியூரில் வசிக்கும் தனியாா் ஒருவருக்கு சொந்தமான மனைப் பிரிவில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா், முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனா். மேலும் குடியிருப்பு பகுதியில் நடைபெறும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசுவிடம் கோரிக்கை மனுவும் வழங்கியுள்ளனா். ஆனால் மனுக்கள் மீது அமைச்சா், அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கோபுரம் அமைக்கப்படும் இடம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து 100 முதல் 500 மீட்டா் தொலைவிற்கு அப்பால் உள்ள காலி இடங்களில் தான் கைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என டிஜிட்டல் ஆப் டெலிகம்யூனிகேசன் சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே புதிதாக பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கதிா்வீச்சால் பொதுமக்கள் மற்றும் பறவைகள் பாதிப்படைய கூடியசூழல் உள்ள நிலையில், பொதுமக்களின் எதிா்பை மீறி தனியாா் நிறுவனம் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஆட்சியா், அமைச்சா், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கண்டன ஆா்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பணிகள் மேலும் நடைபெற்றால் சாலை மறியல், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.