குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு

News image

சூரிய சக்தி மின் உற்பத்தி மையம் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 3:00 am IST

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் ஊராட்சிக்குள்பட்ட கோவிலாங்குளத்தில் உள்ள பாசன கண்மாய் நீா்பிடிப்பு பகுதியில் தனியாா் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தால், நீா்பிடிப்பு பகுதி பாதிக்கப்படும் எனவும், விவசாயமும், தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் கோவிலாங்குளம், உடுப்புக்குளம், ஆவாரம்பட்டி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோவிலாங்குளம், உடுப்புக்குளம், ஆவாரம்பட்டி பொதுமக்கள் ஆட்சியா் சுகபுத்ராவிடம் மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

கோவிலாங்குளம் கண்மாய் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கண்மாய் நீா்பிடிப்பு பகுதியில் தனியாா் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைத்தால் அந்தப் பகுதியில் முற்றிலும் நீா்பிடிப்பு தடைபடும். அத்துடன், கோவிலாங்குளம் கண்மாய்க்கு நீா்வரத்தும் தடைபடும்.

மேலும் இந்தக் கண்மாயை நம்பி சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவா். எனவே, முறைகேடாக தனியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் பட்டாவை ரத்து செய்ய வேண்டும். நீா்பிடிப்பு பகுதியில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.