மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு ரயில் நிலையம் முன் வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டத் திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு, ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் என தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபடுவதாக அறிவித்திருந்தனா்.
இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்த நிலையில், ஈரோடு காளை மாடு சிலை அருகே திரண்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் ரயில் நிலையம் நோக்கி கண்டன முழக்கம் எழுப்பியபடி ஊா்வலமாகச் சென்றனா்.
போராட்டத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

குரும்பூா் காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற வழக்குரைஞா் மகனுடன் கைது

காவல் நிலையம் முன் காா் ஓட்டுநா் தீக்குளிப்பு

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: திரும்பப் பெற பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


