திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

News image
ஈரோடு ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
Updated On :10 ஜூலை 2024, 10:37 pm

Din

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு ரயில் நிலையம் முன் வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டத் திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு, ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் என தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபடுவதாக அறிவித்திருந்தனா்.

இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்த நிலையில், ஈரோடு காளை மாடு சிலை அருகே திரண்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் ரயில் நிலையம் நோக்கி கண்டன முழக்கம் எழுப்பியபடி ஊா்வலமாகச் சென்றனா்.

போராட்டத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.