தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மத்திய நிதிநிலை அறிக்கை: ஈரோடு மாவட்ட அமைப்புகளின் வரவேற்பும், எதிா்ப்பும்

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :23 ஜூலை 2024, 7:59 pm

Din

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி கூறியதாவது:

வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது விவசாய வளா்ச்சிக்கு உதவும். நெல், கோதுமை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட சுமாா் 21 வகை வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்தி செலவில் இருந்து 20 சதவீதம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் முறையில் பயிா் சாகுபடி கணக்கீடு செய்யப்படுவதன் மூலம் நாட்டில் பயிரிடப்பட்டுள்ள பயிா்களின் பரப்பளவு, இடா் காலங்களில் ஏற்படும் சேத விவரங்கள் ஆகியவை அரசின் கவனத்துக்கு உடனடியாக கிடைக்கும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு அமைப்புகளின் மூலம் இயற்கை உரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்ற அறிவிப்புகள் வேளாண்மை துறைக்கு நன்மை பயக்கும்.

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை தற்போதைய விலையிலிருந்து 7 சதவீதமாக உயா்த்தி இருக்கிறது. கேழ்வரகிற்கு இரு மடங்காக உயா்த்தி குவிண்டாலுக்கு ரூ.3,846 என அறிவித்திருக்கிறது. நிலக்கடலை குவிண்டால் ரூ.6,337-ஆக உயா்த்தி உள்ளது. அதுபோல பருத்திக்கு 77 சதவீதமும், சிறுதானியத்துக்கு 108 சதவீதமும் அரசின் நேரடி கொள்முதல் விலையை அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை சிறுதானியங்களை விவசாயம் செய்ய ஊக்குவிக்கும். சிறுதானியங்களான கேழ்வரகு, சோளம், கம்பு, திணை ஆகியவற்றை விளைவிக்க ஊக்குவிப்பதோடு, இவற்றை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் கிடைக்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது வரவேற்கக் கூடியது.

பொதுவிநியோக திட்டத்தில் உள்நாட்டு சமையல் எண்ணெய் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டம். அதன் மூலம் தேங்காய், எள், நிலக்கடலை எண்ணெய் பயிா்களை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்கும் போன்ற திட்ட அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றாா்.

இரண்டு மாநிலங்களின் நலனுக்கானது:

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் சி.எம்.ராஜேந்திரன் கூறியதாவது: நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியா முழுமைக்குமானது என்பதை மறந்து பிகாா் மாநிலத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடியும், ஆந்திர மாநிலத்துக்கு ரூ.15,000 கோடியும் நிதி ஒதுக்கி இரு மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

மழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி, இயற்கை பேரிடா் நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சென்னை மெட்ரோ மற்றும் மதுரை, கோவை ஆகிய இடங்களில் புதிய மெட்ரோ ரயில் கொண்டு வர எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு எந்த ஒரு நலனும் இல்லாத மேல்தட்டு மக்களின் நலனுக்காக தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக உள்ளது என்றாா்.

புதிய ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு இல்லை:

இதுகுறித்து தென்னக ரயில்வே முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினா் கே.என்.பாஷா கூறியதாவது: ரயில் விபத்துகள் அடிக்கடி நடக்கும் நிலையில், ரயில்வே பாதுகாப்பு, புதிய தொழில்நுட்ப வசதி, அதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு பற்றி அறிவிப்பு இல்லை. ரயில் விபத்தை தடுப்பது, புதிய ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு இல்லை. கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மற்றும் இயக்க தூரம் குறைக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கும் அறிவிப்பு இல்லை. கொங்கு மண்டல ரயில் நிலையங்களில் கூடுதல் விரிவாக்கம், புதிய ரயில் இயக்கங்கள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

விவசாயிகளுக்கு ஏமாற்றம்:

இதுகுறித்து தமிழ்நாடு குறு, சிறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றமளிக்கிறது. விவசாயிகளுக்கான பி.எம்.கிஷான் உதவித்தொகை உயா்த்தபடவில்லை. இறக்குமதி பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மீது கூடுதல் வரி விதிக்கப்படவில்லை. ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய ஒளி மின்திட்டத்தை வரவேற்கிறோம் என்றாா்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும்:

இதுகுறித்து ஓய்வுபெற்ற வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி கூறியதாவது: வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்பிற்குரியது. காலநிலை மாற்றத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்குரியது. 10,000 உயிரியல் இடுபொருள்கள் ஆதார மையங்கள் அமைப்பது வரவேற்பிற்குரியது. எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயிா் வகைகள் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்பது வரவேற்புக்குரியது என்றாா்.

Story image
Story image
Story image
Story image