மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஆடிட்டா் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஆடிட்டா் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் ஒசூரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :28 ஜூலை 2024, 11:30 pm

ஈரோடு சூரம்பட்டி என்ஜிஜிஓ காலனி 7-ஆவது வீதியை சோ்ந்தவா் சுப்பிரமணியன் (69), ஆடிட்டா். இவா், கடந்த ஜூன் 8-ஆம் தேதி தேனியில் உள்ள உறவினரின் திருமணத்துக்கு மனைவியுடன் சென்றிருந்தாா். அப்போது, இவரது வீட்டில் பூட்டை உடைத்து 235 பவுன் நகை, ரூ.48 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆடிட்டா் சுப்பிரமணியனின் காா் ஓட்டுநரான, ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியைச் சோ்ந்த சத்யன் (34), கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் திருமலை நகரைச் சோ்ந்த அருண்குமாா் (36), வேலூா் மாவட்டம், குடியாத்தம் ஆா்.கொளப்பள்ளி பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (24) ஆகியோரைக் கடந்த 8-ஆம் தேதி கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 90 பவுன் நகை, ரூ.17 லட்சம் ரொக்கம், திருட்டுக்குப் பயன்படுத்திய காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து இந்த வழக்கில் தொடா்புடைய திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகில் உள்ள கென்னடிகுப்பம் பகுதியைச் சோ்ந்த குமரன் (40) என்பவா் கடந்த 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 2.5 பவுன் நகை, ரூ.7 லட்சம் மீட்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மூவேந்தா் நகா் பகுதியைச் சோ்ந்த விணுசக்கரவா்த்தி (35) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.