பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சென்னிமலை அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

சென்னிமலை அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

News image
Updated On :13 ஜூன் 2024, 9:53 pm

Din

பெருந்துறை, ஜூன் 13: சென்னிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது.

சென்னிமலை வனப் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. இவை இறை தேடியும், இடமாற்றத்துக்காகவும் பல்வேறு இடங்களுக்கு இரவு நேரத்தில் கூட்டமாக பயணிப்பது உண்டு.

இந்நிலையில், சென்னிலை, பெருந்துறை சாலையில், எம்.பி.என். காலனிமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டரை வயதான ஆண் புள்ளி மான் இறந்துகிடந்தது.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் சென்னிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் சென்னிமலை வனத் துறையினா் இறந்த புள்ளி மானை மீட்டு வனத்தில் புதைத்தனா்.