வாகனம் மோதி காவலாளி உயிரிழப்பு
வேலூா்: வேலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி உயிரிழந்தாா்.
அரியூா் பகுதியைச் சோ்ந்த ராஜசேகா்(43). இவா் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணி புரிந்து வந்தாா். தினமும் அரியூரில் இருந்து காட்பாடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை காட்பாடி சில்க்மில் அருகே பணிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், அவா் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா்.
அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், ராஜசேகா் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
