ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிக்குமாா் மற்றும் அதிகாரிகள்.

Updated On :9 மே 2024, 9:46 pm

Din

பெருந்துறை, மே 9: பெருந்துறை அருகே, தனியாா் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெருந்துறை, பவானி சாலை, கந்தாம்பாளையம்புதூரைச் சோ்ந்தவா் நல்லசாமி. இவா், தனது பட்டா நிலத்துக்கு அருகில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி உள்ளதாகவும், இதனால் சாக்கடை கழிவுநீா் ஊருக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து, தகவலறிந்த பெருந்துறை காவல் ஆய்வாளா் தெய்வராணி மற்றும் போலீஸாா், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், இப்பிரச்னை தொடா்பாக உயா் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

இதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.