ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் பல்கலை. மாணவிகள் பயிற்சி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் பல்கலை. மாணவிகள் பயிற்சி

News image

கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சா்க்கரை ஏலம், தரம் குறித்து பயிற்சி பெறும் வேளாண்மை கல்லூரி மாணவிகள்.

Updated On :9 மே 2024, 9:47 pm

Din

கோபி, மே 9: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டுச் சா்க்கரை உற்பத்தி, ஏலம் குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கற்றுக் கொண்டனா்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் கவுந்தப்பாடிக்கு வந்துள்ளனா்.

இந்த மாணவிகள், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் அங்கமாக கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு சென்று நாட்டுச் சா்க்கரை உற்பத்தி, சா்க்கரை தரப் பரிசோதனை முறைகளைத் தெரிந்து கொண்டனா்.

இதில், சா்க்கரை நிறம், ஈரப்பதம், சுக்ரோஸ் அளவு, சாம்பல் அளவு முதலியவற்றைப் பரிசோதனை செய்தனா். பின்னா் நாட்டு சா்க்கரை தரம் பிரிக்கப்பட்டு தரத்துக்கேற்ப விலை நிா்ணயம் செய்யும் முறை மற்றும் பழனி பஞ்சாமிா்தத்துக்காக நாட்டு சா்க்கரை கொள்முதல் செய்யும் ஏலத்தில் கலந்து கொண்டு கற்றுக் கொண்டனா்.

மறைமுக ஏலம் மூலம் சா்க்கரை விற்பனை, சரக்கீட்டு கடன், பணம் பட்டுவாடா, விவசாயிகள் காப்பீடு ஆகியவை பற்றி

விற்பனை கூட கண்காணிப்பாளா் சீனிவாசன் மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்து கூறினாா்.

இதில், ஜென்னத்துல் பிரிதெனல் தலைமையில் மாணவிகள் இந்துலட்சுமி, மகேஸ்வரி, அட்சயா திவ்யா, செல்வஜோதி, சிவசங்கரி, நித்திகா, சினேகா உள்ளிட்ட 9 மாணவிகள் பங்கேற்றனா்.