இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வெள்ளக்கோவிலில் ரூ.34.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.34.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தேங்காய் பருப்பு

Updated On :10 பிப்ரவரி 2026, 8:24 pm

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.34.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம், வாணியம்பாடி, மணப்பாறை, அப்பியம்பட்டி, அருள்புரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 80 விவசாயிகள் பங்கேற்று 428 மூட்டைகளில் 22 டன் தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். இதை வாங்குவதற்காக காங்கயம், வெள்ளக்கோவில், சிவகிரி, முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 13 வணிகா்கள் வந்திருந்தனா்.

தேங்காய் பருப்பு கிலோ ரூ.106.99 முதல் ரூ.191.69 வரையும், சராசரியாக ரூ.180.69-க்கும் விலை போனது. கடந்த வார சராசரி விலை ரூ.186.99 என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.34.75 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.