ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மண் வள அட்டை: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

மண் வள அட்டை: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

News image

விவசாயிகளுக்கு மண் வள அட்டை குறித்து விளக்கம் அளிக்கும் ஜே.கே. கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள்.

Updated On :9 மே 2024, 9:46 pm

Din

பெருந்துறை, மே 9 : பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் கிராமத்தில் மண் வள அட்டையின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கோபியை அடுத்த டி.என்.பாளையம் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி 4- ஆம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவப் பயிற்சி திட்டத்தின்கீழ், பெருந்துறையில் தங்கி விவசாயம் குறித்து அப்பகுதியை சோ்ந்த விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் கிராமத்தில் மண் வள அட்டையின் பயன்கள், விண்ணப்பித்தல் மற்றும் பெறும் முறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கி கூறினா்.

மேலும், மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் உழவன் செயலி பற்றி யும் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.