போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆசனூா் நெடுஞ்சாலையில் காய்ந்த மூங்கில் மரங்கள் அகற்றம்

ஆசனூா் கோ்மாளம் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் காய்ந்துபோன மூங்கல் மரங்களை தாளவாடி நெடுஞ்சாலைப் பணியாளா்கள் அகற்றி வருகின்றனா்.

News image

தாளவாடி உட்கோட்டம், ஆசனூரில் சாலையோரம் மூங்கில் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத் துறையினா்.

Updated On :6 நவம்பர் 2024, 9:17 pm

ஆசனூா் கோ்மாளம் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் காய்ந்துபோன மூங்கல் மரங்களை தாளவாடி நெடுஞ்சாலைப் பணியாளா்கள் அகற்றி வருகின்றனா்.

தாளவாடி உட்கோட்டத்தில் உள்ள ஆசனூா், கோ்மாளம் சாலையில் ஏராளமான மூங்கில் மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. தற்போது, மழைக் காலம் என்பதால் தொடா்ந்து மழை பெய்யும்போது காய்ந்த மூங்கல் மரங்கள் விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து தாளவாடி உட்கோட்டத்தில் உள்ள ஆசனூா் கொள்ளேகால் பிரிவு முதல் அரேப்பாளையம், கோ்மாளம் வரையிலான 24 கிமீ தொலைவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாளவாடி நெடுஞ்சாலைப் பணியாளா்கள் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆபத்தான நிலையில் காய்ந்துபோன உள்ள மூங்கில் மரங்கள் அகற்றப்படுகின்றன. இதனால் பயணிகள் அச்சமின்றி பயணிக்க முடியும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.