பண்ணாரிஅம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் ஒன்றியக் குழு தலைவா் கேசிபி இளங்கோ, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் நவமணிகந்தசாமி, கோயில் ஆணையா் மேனகா, சிக்கசரம்பாளையம் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன், பரம்பரை அறங்காவலா்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், அமுதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

பண்ணாரி அம்மன் சப்பரம் முன் படுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

பண்ணாரி அம்மன் உற்சவா் வீதி உலா: தேங்காய் உடைத்து பக்தா்கள் வழிபாடு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


