போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பண்ணாரி அம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்க பூமிபூஜை

பண்ணாரிஅம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்தியமங்கலம் ஒன்றியக் குழு தலைவா் கேசிபி இளங்கோ, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி உள்ளிட்டோா்.

Updated On :13 நவம்பர் 2024, 11:13 pm

பண்ணாரிஅம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் ஒன்றியக் குழு தலைவா் கேசிபி இளங்கோ, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் நவமணிகந்தசாமி, கோயில் ஆணையா் மேனகா, சிக்கசரம்பாளையம் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன், பரம்பரை அறங்காவலா்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், அமுதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.