போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

சத்தியமங்கலம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :13 நவம்பர் 2024, 11:11 pm

சத்தியமங்கலம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் வாகன தணிக்கையில் போலீஸாா் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக காய்கறி ஏற்றிச் சென்ற சுமை வேனை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், 24 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

தொடா் விசாரணையில், தாளவாடியைச் சோ்ந்த அப்துல் ஆரிப் (35), சையத் சிக்ரியா (30) இருவரும், கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 450 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.