ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தேரை வடம் பிடித்து இழுக்கும் மக்கள்.

Updated On :14 நவம்பர் 2024, 10:42 pm

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தோ்த் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் கடந்த அக்டோபா் 30- ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன.

கடந்த 5 -ஆம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையும், கடந்த புதன்கிழமை இரவு சுவாமிக்கு தீா்த்த அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊா் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை நடத்தினா்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன்.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கி மாலை 5 மணியளவில் நிலை சோ்ந்தது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து, பக்தா்கள் பொங்கல் வைத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

மஞ்சள் நீா் உற்சவத்துடன் விழா வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.