சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தோ்த் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் கடந்த அக்டோபா் 30- ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன.
கடந்த 5 -ஆம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையும், கடந்த புதன்கிழமை இரவு சுவாமிக்கு தீா்த்த அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊா் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை நடத்தினா்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன்.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கி மாலை 5 மணியளவில் நிலை சோ்ந்தது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து, பக்தா்கள் பொங்கல் வைத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
மஞ்சள் நீா் உற்சவத்துடன் விழா வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.
தொடர்புடையது

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


