போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தேசிய அளவிலான பாட்மின்டன் போட்டி: ஈரோடு வீராங்கனை தங்கப் பதக்கம்

17 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான பாட்மின்டன் கலப்பு இரட்டையா் போட்டியில் ஈரோடு வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றாா்.

News image

அனன்யா.

Updated On :14 நவம்பர் 2024, 10:38 pm

17 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான பாட்மின்டன் கலப்பு இரட்டையா் போட்டியில் ஈரோடு வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றாா்.

தேசிய அளவிலான சப்-ஜூனியா் தரவரிசை பாட்மின்டன் போட்டி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் ஈரோட்டை சோ்ந்த முதல் நிலை வீராங்கனை அனன்யா அருண் மற்றும் மதுரையைச் சோ்ந்த சச்சின் ஆகியோா் 17 வயதுக்குள்பட்ட கலப்பு இரட்டையா் பிரிவில் பங்கேற்றனா்.

இறுதி ஆட்டத்தில் 21-18, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் தில்லி அணியை வீழ்த்தி தமிழக அணி வீரா்கள் அனன்யா, சச்சின் ஆகியோா் தங்கம் வென்றனா். தேசிய அளவிலான பாட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனன்யாவை, மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் மற்றும் ஈரோடு மாவட்ட பாட்மின்டன் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பாட்மின்டன் வீராங்கனை அனன்யா சென்னையில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற அகில இந்திய சப்-ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன் பெண்கள் இரட்டையா் பிரிவில் வெண்கலப் பதக்கமும், விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய சப்-ஜூனியா் பாட்மின்டன் தரவரிசை போட்டியில் பெண்கள் இரட்டையா் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளாா். 8 ஆவது வயது முதல் பாட்மின்டன் பயிற்சி மேற்கொண்டு வரும் அனன்யா சப்-ஜூனியா் அளவில் இரட்டையா் பிரிவில் தேசிய அளவில் இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளாா்.