ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆதிதிராவிடா் நலத் துறை மாணவிகள் விடுதியில் அமைச்சா் மா.மதிவேந்தன் ஆய்வு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பவானியில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதியில் அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மாணவிகளிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் அமைச்சா் மா.மதிவேந்தன்.

Updated On :20 நவம்பர் 2024, 8:40 pm

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பவானியில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதியில் அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பவானி - அந்தியூா் சாலையில் உள்ள மாணவிகள் விடுதிக்குச் சென்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், அங்கு தங்கியுள்ள மாணவிகளிடம் உணவு, வசிப்பிடம், தூய்மை, பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து விசாரித்தாா். மேலும், மாணவிகளுக்கு தயாா் செய்யப்பட்டிருந்த உணவின் தரத்தையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ராஜகோபால், விடுதிக் காப்பாளா்கள் வித்யகலா, தமிழ்செல்வி, மீனாட்சி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.