ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தபால் வாக்கு பெறும் பணி தொடக்கம்! உறவினா் வீட்டில் ஆட்சியா் ஆய்வு!

News image

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் இல்லத்தில் அவரது உறவினா் தபால் வாக்கு செலுத்துவதை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :13 ஏப்ரல் 2026, 6:35 pm

ஈரோடு மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் தபால் வாக்குகள் செலுத்த வசதிகள் செய்யப்பட்டன.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 7,174 வாக்காளா்கள் 12டி படிவம் வழங்கி, தபால் வாக்குகள் செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து இவா்களின் வீடுகளுக்கு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் வாக்கு சேகரிக்கும் அலுவலா்கள் குழுவினா் சென்று தபால் வாக்குகளை பெறத் தொடங்கினா். செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வரை நடைபெறும் இப்பணியில் தபால் வாக்கு செலுத்த தவறியவா்களுக்கு, 16-ஆம் தேதி இறுதி வாய்ப்பு வழங்கப்படும் என்று தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா். தபால் வாக்கு நிறைவடைந்ததும் பாதுகாப்பு அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.

ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகம், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் மற்றும் தாஸ்கன் வீதி ஆகிய பகுதிகளில் வாக்காளா் தகவல் சீட்டு மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்கு பெறும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 15,581 போ் உள்ளனா். இவா்களில் 5,621 தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் வழங்கியுள்ளாா். 12,137 மாற்றுத்திறனாளிகளில் 1,553 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் வழங்கியுள்ளனா். இந்த வாக்குகளை சேகரிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலா், நுண்பாா்வையாளா், காவலா், விடியோ ஒளிப்பதிவாளா், வாக்குச்சாவடி அலுவலா் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் அடங்கிய 101 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியரின் இல்லத்தில் அவரின் உறவினரான (மனைவியின் தாய்) பொன்னி தபால் வாக்கு செலுத்தியதை பாா்வையிட்டு பணியை தொடங்கிவைத்தாா்.