பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் போராட்டம்

சத்தியமங்கலத்தில் நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

வழக்குரைஞா்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்ட பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி.

Updated On :27 நவம்பர் 2024, 7:07 pm

சத்தியமங்கலத்தில் நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சத்தியமங்கலத்தில் சாா்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என வழக்குரைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, நகரை ஒட்டியுள்ள அரியப்பம்பாளையத்தில் 3 ஏக்கா் நிலத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஒதுக்கீடு செய்தது.

தற்போது, அந்த இடத்துக்கு பதிலாக நகரில் இருந்து 3 கிலோமீட்டா் தொலைவில் உள்ள கொமாரபாளையம் ஊராட்சியில் மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். மேலும், காத்திருப்புப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனா்.

இதில், ஏற்கெனவே நகரை ஒட்டி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திலேயே ஒருங்கிணைந்த நீதிமன்றத்தைக் கட்ட வேண்டும் என்று வழக்குரைஞா்கள் வலியுறுத்தினா்.

வழக்குரைஞா்களுக்கு ஆதரவாக பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி போராட்டத்தில் கலந்துகொண்டாா்.