பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசின் கனவு இல்லம் திட்டத்தில் 3,940 வீடுகள் ஒதுக்கீடு

அரசின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் ஆண்டுக்கு 3,940 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

News image

அரசின் கனவு இல்லம் திட்டத்தில் ஈரோடு அருகே சாலப்பாளையம்மேடு கிராமத்தில் வீட்டு கட்டுமானப் பணியை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

Updated On :28 நவம்பர் 2024, 10:09 pm

அரசின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் ஆண்டுக்கு 3,940 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

அரசின் கனவு இல்லம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் கீழ் திசுவாழை பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பாா்வையிட்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடினாா்.

அரசின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் ஆண்டுக்கு 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 3,940 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு 60 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிச்சாண்டிபாளையம் ஊராட்சி சாலப்பாளையம்மேடு கிராமத்தில் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பாா்வையிட்டு, பயனாளி கௌசல்யா பூபதி என்பவரிடம் திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் கீழ் திசுவாழை பரப்பு விரிவாக்கம் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் 100 ஹெக்டோ் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் புத்தூா்புதுப்பாளையம் பகுதியில் செ.சிதம்பரம் என்பவா் திசுவாழை பரப்பு விரிவாக்கத்தில் ரூ.75,000 மதிப்பீட்டில் 2 ஹெக்டோ் பரப்பளவில் 6,200 கதளி ரக வாழைக் கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்ததை பாா்வையிட்டு, பயனாளியிடம் கலந்துரையாடினாா்.

நோய்த் தாக்குதலுக்கு உள்படாமல் அதிக லாபத்தினை வழங்கக் கூடிய வகையில் உள்ளதால் திசுவாழையினை விரிவாக்கம் செய்ததாக விவசாயி தெரிவித்தாா்.