மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

82 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

காந்தி ஜெயந்தி நாளான புதன்கிழமை விதிகளை கடைப்பிடிக்காத 82 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:15 am

காந்தி ஜெயந்தி நாளான புதன்கிழமை விதிகளை கடைப்பிடிக்காத 82 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான புதன்கிழமை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.

அப்போது, கடைகள், நிறுவனங்களில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிா, பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படுகிா அல்லது 3 நாள்களுக்குள் ஒரு நாள் மாற்று விடுப்பு வழங்கப்படுகிா, அதற்கான படிவம் சமா்பித்துள்ளாா்களா என ஆய்வு செய்தனா்.

இதில், 45 கடைகள், 56 உணவு நிறுவனங்கள், 5 மோட்டாா் நிறுவனங்கள் என மொத்தம் 106 நிறுவனங்களில் நடந்த ஆய்வில் 82 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காதது, விதிகளை கடைப்பிடிக்காதது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.