மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 12,983 தேங்காய்களை கொண்டு வந்திருந்தனா்.
இதில் ஒரு கிலோ ரூ. 36.39 முதல் ரூ.43.50 வரையும், சராசரி விலையாக ரூ.40.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் 4,961 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 55-க்கு விற்பனையாயின.
இதேபோல தேங்காய் பருப்பு 166 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் முதல்தரம் ஒரு கிலோ ரூ. 117 முதல் ரூ.124.31 வரைக்கும், சராசரி விலையாக ரூ. 120.60-க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரம் ரூ. 81.16 முதல் ரூ. 107.60 வரைக்கும், சராசரியாக ரூ. 100.79-க்கும் விற்பனையாயின. மொத்தம் 4,434 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ. 5 லட்சத்து 3 ஆயிரத்து 144-க்கு விற்பனையாயின.
இதேபோல சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 305 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 64.19-க்கும், அதிகபட்சமாக ரூ. 76.19-க்கும், சராசரியாக ரூ. 73.09-க்கும் விற்பனையாயின. மொத்தம் 9,978 கிலோ எடையுள்ள நிலக்கடலை ரூ. 7 லட்சத்து 9 ஆயிரத்து 826-க்கு விற்பனையானதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்
1,033 வேட்பாளர்கள்! தேர்தல் சீர்திருத்தத்துக்கு வித்திட்ட மொடக்குறிச்சி!

பரமத்தி வேலூரில் ரூ. 4.96 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

