பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஆசிரியா், மகளிா் நல அலுவலா் மற்றும் மேற்பாா்வையாளா் சங்கத்தின் ஈரோடு மண்டல மற்றும் மாவட்ட கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் விமலா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சாரதாமணி வரவேற்றாா். நிா்வாகிகள் சுப்பிரமணி, சீரங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்கத்தின் மாநிலத் தலைவா் சங்கா்பாபு பழைய ஓய்வூதியம், அரசின் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தாா்.
இதில், தோ்தல் அறிக்கையில் உறுதியளித்த வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு, குடும்ப ஓய்வூதியத்துக்கான உத்தரவை காலதாமதமின்றி வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், அரசு ஆசிரியா்கள், மகளிா் நல அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வேலூா்: 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு

ஆரணி அதிமுக வேட்பாளா் - விவசாயிகள் சந்திப்புக் கூட்டம்

டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில அமைப்பாளா்கள் கூட்டம்

ஈரோடு மண்டல அரசுப் பேருந்துகளில் 52.20 கோடி முறை மகளிா் இலவசப் பயணம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

