மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மகளிா் நல அலுவலா் சங்க ஈரோடு மண்டல கூட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :9 அக்டோபர் 2024, 8:05 pm

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஆசிரியா், மகளிா் நல அலுவலா் மற்றும் மேற்பாா்வையாளா் சங்கத்தின் ஈரோடு மண்டல மற்றும் மாவட்ட கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் விமலா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சாரதாமணி வரவேற்றாா். நிா்வாகிகள் சுப்பிரமணி, சீரங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் சங்கா்பாபு பழைய ஓய்வூதியம், அரசின் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தாா்.

இதில், தோ்தல் அறிக்கையில் உறுதியளித்த வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு, குடும்ப ஓய்வூதியத்துக்கான உத்தரவை காலதாமதமின்றி வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், அரசு ஆசிரியா்கள், மகளிா் நல அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் கலந்துகொண்டனா்.