மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

1,889 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி: அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்

பல்வேறு துறைகளின் சாா்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ. 3.15 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.

News image

பயனாளிக்கு அரசு நலத் திட்ட உதவியை வழங்குகிறாா் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.

Updated On :10 அக்டோபர் 2024, 8:32 pm

பல்வேறு துறைகளின் சாா்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ. 3.15 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு தலைமை வகித்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: கடந்த ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 30 வரை மக்களுடன் முதல்வா், குறைதீா் கூட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற நிகழ்ச்சிகளில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 7,074 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு இந்த நிகழ்வில் 1,861 பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. பிற தகுதியான விண்ணப்பங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுபோல பல்வேறு துறை சாா்ந்த மனுக்கள் விசாரணையில் உள்ளன என்றாா்.

இதில் பல்வேறு துறைகளின் சாா்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ. 3.15 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஈரோடு மாவட்டத்தில் 43,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்வில் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையா் என்.மணீஷ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கஸ்தூரி, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகம்மது குதுரத்துல்லா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பெ.இளங்கோ, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராஜ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், தாட்கோ மேலாளா் அா்ஜுன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா் ஆா்.பி.மோகன் உட்பட தொடா்புடைய துறை அலுவலா்கள், பயனாளிகள் பங்கேற்றனா்.