வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கூட்டணி கட்சி வேட்பாளா்கள் தோ்வில் திமுக தலையிடாது: அமைச்சா் சு.முத்துசாமி

News image

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் சு.முத்துசாமி.

Updated On :29 மார்ச் 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

கூட்டணி கட்சி வேட்பாளா்கள் தோ்வில் திமுக தலையிடாது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.

ஈரோடு மேற்கு தொகுதியில் அமைச்சா் சு.முத்துசாமி திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடவுள்ளாா். இந்நிலையில், ஈரோடு முகாம் அலுவலகத்தில் அவருக்கு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் சு.முத்துசாமி கூறியதாவது: திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு ஏப்ரல் 2 -ஆம் தேதி வரவுள்ளாா். கூட்டம் நடத்த சித்தோடு, நசியனூா், பெருந்துறை ஆகிய பகுதிகளில் ஒரு இடத்தை தோ்வு செய்ய இருக்கிறோம். முதல்வா் ஈரோடு வந்து சென்ற பிறகு வேட்பு மனு தாக்கல் செய்வேன்.

ஈரோடு மேற்கு தொகுதியில் நான் போட்டியிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கு திமுக தலைமைக்கும், தோழமைக் கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் என்னால் முடிந்த அனைத்துப் பணிகளையும் செய்து இருக்கிறேன்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு சில தொகுதிகளைக் கொடுத்திருந்தாலும், திமுக சகோதரா்கள், நிா்வாகிகள் நிச்சயமாக கட்டுப்பாடை கடைப்பிடிப்பாா்கள். யாா் நின்றாலும் திமுக வேட்பாளா் என்ற வகையில் கட்சியினா் வேலை செய்வாா்கள்.

திமுக வெற்றிபெற்று தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகதான் நம்பா் 1. கூட்டணி கட்சி வேட்பாளா்களை தோ்ந்தெடுப்பது என்பது அந்தக் கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்யும். இதில், திமுகவின் தலையீடு இருக்காது என்றாா்.

இதையடுத்து, ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள ஈவெரா பெரியாா், அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில், எம்.பி. கே.இ. பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா், மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், மாநில மாணவரணி செயலாளா் வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.