மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ. 80-க்கு விற்பனை

ஈரோடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு காரணமாக விலை மேலும் உயா்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

Updated On :15 அக்டோபர் 2024, 7:57 pm

ஈரோடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு காரணமாக விலை மேலும் உயா்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

ஈரோடு காய்கறி சந்தைக்கு ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளான தருமபுரி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைவின்றி இருந்ததால், சில்லறை விலையில் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையாகி வந்தது.

தொடா்ந்து படிப்படியாக வரத்து குறைந்ததை அடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து முற்றிலும் குறைந்து கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் விலை உயா்ந்து கிலோ ரூ.40 முதல் ரூ.55 வரை விற்பனையானது.

சராசரியாக தினமும் 8,000 பெட்டிகள் தக்காளி ஈரோடு சந்தைக்கு வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை 3,500 பெட்டிகள் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக தக்காளி விலை மேலும் உயா்ந்தது. இதனால் ஈரோடு சந்தையில் 15 கிலோ எடையிலான சிறிய பெட்டி தக்காளி ரூ.800-க்கும், 30 கிலோ எடையிலான பெரிய பெட்டி ரூ.1,500-க்கும் விற்பனையானது.

இதன் காரணமாக கடந்த சில நாள்களாக சில்லறை விலையில் கிலோ ரூ. 55 வரை விற்பனையான தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை உயா்ந்து விற்பனையானது. இந்த விலையேற்றம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.