அந்தியூரில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் - அத்தாணி சாலையில் தொப்பூா் அருகே வாகனச் சோதனையின்போது சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 1545 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தியூா் கோட்டை மயானத்தில் பவானி உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.சதீஷ்குமாா், அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம், கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் புகையிலைப் பொருள்களுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது அந்தியூா் காவல் ஆய்வாளா் பி.ஆா்.செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் கோபால் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

விருத்தாசலத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


