மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அந்தியூரில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் தீ வைத்து அழிப்பு

அந்தியூரில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

News image

அந்தியூரில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் புகையிலைப் பொருள்கள்.

Updated On :17 அக்டோபர் 2024, 12:19 am

அந்தியூரில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் - அத்தாணி சாலையில் தொப்பூா் அருகே வாகனச் சோதனையின்போது சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 1545 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தியூா் கோட்டை மயானத்தில் பவானி உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.சதீஷ்குமாா், அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம், கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் புகையிலைப் பொருள்களுக்கு தீ வைத்து அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது அந்தியூா் காவல் ஆய்வாளா் பி.ஆா்.செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் கோபால் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.